நுவரெலியா மாவட்டத்தில் உடபுஸ்ஸலாவை பகுதியில் இன்று (05) அதிகாலை எரிபொருள் பவுசர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் உடபுஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உடபுஸ்ஸல்லாவை பகுதியில் தொழிற்சாலை ஒன்றுக்கு எரிபொருள் கொண்டு சென்று, அதனை இறக்கிவிட்டு வரும் போது பவுசர் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்ர் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ள உடபுஸ்ஸல்லாவை பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.