Breaking news-அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் வசந்த உட்பட இருவர் பலி ; நால்வர் வைத்தியசாலையில்

0
301

அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா (கிளப் வசந்த ) உட்பட இருவர் பலியாகியுள்ளதாகவும் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (08) முற்பகல் நடாத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானோர் மத்தியில் பிரபல பாடகி சுஜீவாவும் அடங்குவதாக தெரியவருவதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here