Breaking News – 13 ஆம் திகதி பதவி விலகுகிறார் கோட்டா – வீடியோ இணைப்பு

0
477

நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலக உள்ளதாக ஜனாதிபதி கோட்டா அறிவித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை பதவி விலகக் கோரி தொடர்ச்சியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில் பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ளார்.

இன்று காலை முதல் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற பாரிய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மாலை கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதியை பதவி விலகக் கோரி அனைத்து கட்சிகளும் சபாநாயகரிடம் வலியுறுத்தியிருந்தனர். அதற்கமைவாக சபாநாயகர் குறித்த விடயத்தை கடிதம் மூலம் ஜனாதிபதி கோட்டாவிற்கு இன்று மாலை அனுப்பியிருந்த நிலையில், கோட்டா தனது பதவி விலகலை சற்று முன் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here