Go Home Gota ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

0
379

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் இல்லம், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றிலிருந்து அமைதியான முறையில் வெளியேறவுள்ளதாக கோட்டகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

, ஜனாதிபதி செயலகம்/ பழைய பாராளுமன்றம் மற்றும் காலி முகத்திடலில் தமது போராட்டத்தை தொடர உள்ளதாகவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என கோட்டகோகம போராட்ட செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here