I.O.C எரிபொருள் நிலையங்களுக்கு பூட்டு ?

0
290

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்களும் மூடப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.

பாதுகாப்பினை கருத்திற்கொண்டே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும், லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (.ஐ.ஓ.சி) நாளை சனிக்கிழமை மூடுவதற்கு வாய்ப்புள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் (எம்.டி) மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்தில் கொண்டு தமது முனைய எரிபொருள் நிலையங்களை மூடுவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நேற்றிரவு காலியில் எரிபொருள் வரிசையில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவத்தையடுத்து எரிபொருள் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here