whatsApp ஊடாக போலியான செய்தி பரப்பியவர் கைது.

0
254

Whatsapp   இன் ஊடாக போலியான செய்தியை பரப்பியதான குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இவர் கடுவலை பகுதியைச் சேர்ந்தவரென்றும் தெரியவருகிறது.

பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரிலேயே வாட்ஸ்அப் மூலம் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் திணைக்களத்தின் சைபர் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று கொழும்பில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்

 மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here