குறைந்த எடையுள்ள பாணைக் கண்டறிவதற்கான சோதனைகள் பயனற்ற முடிவுகளைத் தரும்: பேக்கரி உரிமையாளர்கள்

0
175

பேக்கரி தொழிலுக்கு தீர்வுகளை வழங்காமல், குறைந்த எடை கொண்ட பாண்களை கண்டறியும் வகையில் சோதனைகளை அர்த்தமில்லாத செயல் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் (ACBOA) தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

450 கிராம் தரநிலையை பேக்கரிகள் கடைப்பிடிக்கின்றனவா என்பதை தீர்மானிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை பேக்கரிகளை சோதனையிட ஆரம்பித்து ள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எடை பிரச்சினைகளை சரிபார்ப்பதற்காக சுமார் 70 பேக்கரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, பேக்கரி உரிமையாளர்கள் 450 கிராம் எடையுள்ள பாண்ணை தயாரித்து தங்கள் செலவுகளை ஈடுகட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். பாணுக்கான விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை இல்லை மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கு தாங்களாகவே விற்பனை விலையை தீர்மானிக்குமாறு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற சோதனைகளை நடத்துவது இந்தத் தொழிலுக்கு எந்த தீர்வையும் கொண்டு வராது என்றாலும், நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மாதக்கணக்கில் தொடர்ந்து சோதனைகளை நடத்த வேண்டும், ஒரு நாளைக்கு 100 பேக்கரிகளிளாவது அவர்கள் சோதனைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சோதனை செய்யப்பட்ட பேக்கரிகள் அபராதம் செலுத்த அதே நடைமுறை தொடரும், இல்லையெனில், கோதுமை மா உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு கொண்டு பேக்கரி பொருட்களை விற்பனை செய்ய வழி இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here