நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கு விஷேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் வெள்ளம் காரணமாக பரீட்சை நிலையத்தை அடைய முடியாவிட்டால், பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விஷேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.