தந்தை செலுத்திய வேனுக்குள் சிக்கி 2 வயது மகள் பலி

0
289

தந்தை செலுத்திய வேனுக்குள் சிக்கி 2 வயது மகள் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார்திடல் பகுதியில்

இச்சம்பவத்தில் ரஜீந்தன் நட்சத்திரா எனும் இரண்டு வயது சிறுமியே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. தந்தை வேனை பின்னால் எடுத்த போது சிறுமி தடக்கி வீழ்ந்து வேனுக்குள் சிக்குண்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here