பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை

0
376

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற சந்தேகத்தில் கைதான பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ் சாரதியை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் இன்று உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் பெண்கள் பிரிவில் பெண் பொலிஸ் உத்தியோகத்தராக கடமைற்றிவரும் பெண் பொலிஸ் உத்தியோத்தர் மீது சம்பவதினமான நேற்று (06) புதன்கிழமை அங்கு சாரதியாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தில் வைத்து கையைப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொண்டு வந்ததையடுத்து உடனடியாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பணியிலிருந்து இடைநிறுத்தியதுடன் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு ஆலோசனை வழங்கியதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கைது செய்ததற்கமைவாக இவ்வாறான தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here