பெற்றோல் – டீசல் கிடைக்கும் திகதி அறிவிப்பு

0
276

பெற்றோல் , டீசல் எப்போது இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்ற அறிவித்தலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஜுலை மாதம் 22 ஆம் திகதிக்கு பின்னரே பெற்றோல் கிடைக்குமென்றும் ஜூலை 11 ஆம் திகதி பின்னரே டீசல் குறித்த விசேட குழுவின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் நான்கு வாரங்களுக்குத் தேவையான ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு, ஜூலை மாதத்தில் வரவேண்டும் என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

டீசலை இறக்குமதிச்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜூலை இரண்டாவது வாரத்தில் டீசல் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் ஏற்றுமதி தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here