பிரபல கால்பந்து வீரர் மறைந்தார்

0
235

எடிசன் நஷ்டிமென்டோ என்ற இயற்பெயரை கொண்ட உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் பீலே காலமானார். பிரேசில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது வயது 82வது வயதில் உயிரிழந்துள்ளார்.

அவர், கால்பந்து களத்தில் பீலே என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். 15 வயதில், பீலே பிரேசில் தேசிய கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அரங்கில் நுழைந்தார்.

1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல உதவிய பீலே, 2000 ஆம் ஆண்டில் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறுநீரகம் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பீலே உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here